சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில், ஐயப்ப சுவாமிக்கு வைகையாற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக தென்கரை ஐயப்பன் கோயிலில், பரசுராம் சிவாச்சாரியார் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது. பின்னர் செண்டை மேளம் முழங்க, யானை மீது ஐயப்பன் ஊர்வலமாக வைகையாற்றுக்கு வந்தார். அங்கு ஐயப்பனுக்கு 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ஐயப்ப பக்தர்கள் முன்னிலையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் சரண கோஷமிட்டனர்.