மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36வது தலைவராக ரோஜர் பின்னி கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றார். இந்நிலையில் அவர் பொறுப்புக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மருமகளால் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. சஞ்சீவ் குப்தா என்ற நபர் ரோஜர் பின்னி மீது புகார் அளித்துள்ளார். அதில் ரோஜர் பின்னியின் மருமகளான மாயந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது.