சென்னை: திமுக இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: இலக்கிய அணிப் புரவலர்களாக தஞ்சை கூத்தரசன், மு.தென்னவன், ந.செந்தில், எம்.எஸ்.சி. செந்தலை கௌதமன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி நியமிக்கப்படுகிறார். இலக்கிய அணி துணைத் தலைவர்-கவிச்சுடர் கவிதைப்பித்தன், இலக்கிய அணிச் செயலாளர்- முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன்.