தேனி: கம்பம் அருகே பள்ளத்தாக்கில் 2-ம் போக சாகுபடிக்காக நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி, பழனிசெட்டிப்பட்டி உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2-ம் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. வயல் பகுதிகளை மாடு பூட்டியும், டிராக்டர் மூலமும் உழுவடைய செய்து நெல் நாற்றுகளை நாடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.