பெய்ஜிங்: கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு வெளியே வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டு கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஊதியமும் முறையாக வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.