சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே வனப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட பெண் யானைக்கு வனத்துறையினர் மருத்துவக் குழுவினரின் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யானை பரிதாபமாக உயிரிழந்தது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் அடிக்கடி மலை அடிவாரப்பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.