போபால்: மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் உமாங் சிங்கார் மீது நவ்கான் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண், எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார்.