திருப்பதியில் ஜெகன்னா பொன்விழா கொண்டாட்டம்: கலைஞர்களுடன் அமைச்சர் ரோஜா நடனம்

திருப்பதி,: திருப்பதி மகதி கலை அரங்கில் ஜெகன்னா பொன்விழா கலாசார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. முதல் நாள் நிகழ்ச்சியை துணை முதல்வர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பிரார்த்தனை பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

2வது நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா பங்கேற்றார். கோலாட்டம், பரதநாட்டியம் உள்பட பல்வேறு நடனங்கள் அரங்கேறியது. இதை ரசித்து பார்த்து கொண்டிருந்த அமைச்சர் ரோஜா, திடீரென அவர்களுடன் சேர்ந்து கலக்கல் நடனமாடினார். அப்போது விழாவில் திரண்டிருந்தவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து  நடன கலைஞர்களுடன் செல்பி எடுத்து கொண்ட ரோஜா, சிறப்பாக நடனமாடியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: