கொழும்பு: இலங்கை அதிபருக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளதால் தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெற்றுக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் மீண்டும் போராட்டம் வெடித்தால் அதனை கட்டுப்படுத்த எந்த நிலைக்கும் செல்லலாம் என போலீசாருக்கும், ராணுவத்தினருக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார்.