தெலங்கானாவில் வெடிகுண்டு மிரட்டல்: கோயில், மசூதியில் சோதனை

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகர போலீசாருக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் போன் கால் வந்தது. அதையடுத்து ஐஎஸ் சதன் சாலை பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் மசூதி பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். ஆனால் சந்தேகப்படும்படியான தடயங்கள் கிடைக்காததால், போனில் விடுக்கப்பட்டது போலி வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு என்பது தெரியவந்தது.

இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் போன் கால் காரணமாக போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் குறிப்பிட்ட சில பகுதியில் நேற்று மக்கள் பீதியடைந்திருந்தனர். முன்னதாக கடந்த மே மாதம் கரீம்நகர் நகரில் உள்ள வணிக வளாகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெலங்கானா போலீசாருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில் அதுவும் போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது உறுதியானது. தொடர்ந்து அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால், தெலங்கானா போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: