போடி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகம் - கேரளாவை இணைக்கும், போடி அருகே குரங்கணி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைச்சாலையில் சுமார் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஆங்காங்கே பாறைகள் உருண்டு, மரங்கள் முறிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் மண்ணை அப்புறப்படுத்தி துரித நடவடிக்கை எடுத்தனர்.