கல்வியும், மருத்துவமும் அரசின் இரு கண்கள்: சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: கல்வியும், மருத்துவமும் அரசின் இரு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஏழை மக்கள் நலனுக்காக கலைஞரால் ஏராளமான சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் கூறினார்.

Related Stories: