டெல்லி: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து தன்னை நீக்கும் கேரள அரசின் அவசர சட்டத்தை பரிசீலனை செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க இருப்பதாக ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக, ஆளுங்கட்சி தரப்பு நியமனங்களுக்கு கேரள ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர் ராஜினாமா செய்ய உத்தரவிட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கும், ஆளுநர் ஆரிப் கானுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டத்தை பிறப்பிக்க கடந்த 9ம் தேதி கேரள அமைச்சரவை முடிவு செய்தது.