மும்பை: நடைபயணம் மேற்கொள்வதால், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.