குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார்: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

மும்பை: நடைபயணம் மேற்கொள்வதால், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார். இதே போல இப்பயணத்தில் இடம் பெற்றுள்ள மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், திக் விஜய் சிங் ஆகியோரும் குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார்கள். இதுதொடர்பாக முறைப்படி மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவரிடம் தகவல்கள் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: