திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தவிஞ்சால் உள்பட சில பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல் பரவியது. இதையடுத்து அப்பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மானந்தவாடி அருகே எடவகா பகுதியைச் சேர்ந்த நாஷ் என்பவரின் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த சில பன்றிகள் திடீரென செத்தன. இதையடுத்து அந்த பன்றிகளின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.