கடலூர்: வீராணம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 47.5 அடி உயரம் கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 45.5 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.