தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. ஒப்புகைச்சீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து தற்போது கருத்து கூற இயலாது என்றார். பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்காக பாஜக தலைவர் நட்டாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது பற்றி கருத்துக் கூற எடப்பாடி மறுப்பு தெரிவித்துவிட்டார். தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அதுப்பற்றி பேச இயலாது என கூறினார்.

The post தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: