திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், பினராயி விஜயன் அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் பறிக்கும் அவசர சட்டத்தை கொண்டுவர கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் தொடர்பாக கேரள அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பணிப்போர் வலுத்து வருகிறது. ஆளுநருக்கு எதிரான போராட்டத்தில் கேரள அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்று கடந்த வாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வி. கோவிந்தன் கூறியிருந்தார். இந்நிலையில் மாநில ஆளுநருக்கு மாற்றாக உயர்கல்வித்துறை நிபுணர்கள் அல்லது அமைச்சரவை உறுப்பினர்களை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமனம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது.