ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, 5 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், அய்யனார் கோயிலுக்கு செல்லும் சாலையில், எஸ்.வளைவு என்னும் இடத்தில் வனக்காப்பாளர் பிரபு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படியாக இருவர் சென்றனர்.
வனக்காப்பாளர் அவர்களை நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, அவர்கள் கையில் இருந்த சாக்கு மூட்டையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர்.