திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று திருவனந்தபுரம் விமானநிலையம் 5 மணி நேரம் மூடப்பட்டது. 10 விமானங்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. கடைசி நாளான நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 5 மணியளவில் பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து இந்த ஆராட்டு ஊர்வலம் புறப்பட்டு திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக சங்குமுகம் கடற்கரையை அடைந்தது. பின்னர் கடலில் சுவாமியின் விக்கிரகத்திற்கு ஆராட்டு நடைபெற்றது. இதன் பின்னர் அதேபோல விமானநிலைய ஓடுபாதை வழியாக ஊர்வலம் பத்மநாபசுவாமி கோயிலை அடைந்தது.