கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைதான பார்த்தா சட்டர்ஜி, தயவு செய்து என்னை வாழ விடுங்கள் எனக் கோரி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, அம்மாநில ஆசிரியர், ஊழியர்கள் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து அவர் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் பல கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்க கட்டிகள், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன.