நவி மும்பை: இந்தியாவில் முதன்முறையாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி போட்டிக்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்றன. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று இந்த இரு அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடந்தது. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.