புதுடெல்லி: சீன கடன் செயலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக ஆன்லைன் மூலம் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆதார் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்களை தருவதன் மூலமாக தனிநபர் கடன் எளிதாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, சீன கடன் செயலிகள் மூலம் கடன்கள் அளிக்கப்பட்டு, பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன. எளிதாக கடன் கொடுப்பதைப் போல கொடுத்துவிட்டு அதற்கு பிறகு அதிக பணம் கேட்டு கொடுக்கும் தொல்லைகளால் பலர் தற்கொலை செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சீன கடன் செயலிகளை ஒன்றிய அரசு தடை செய்துள்ளது.