கொல்கத்தா: ‘ஜனநாயகத்தின் அனைத்து அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் முடக்கப்படுவதால், அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு செல்கிறது,’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மம்தா பேசியதாவது: நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.