ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார். அவரை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரித்தனர்.