எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றார். அவரை திரும்பி செல்லும்படி வீரர்கள் எச்சரித்தனர்.  

ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்திய பகுதிக்குள் முன்னேறியதால் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், அந்த நபர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அனுப்கர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நபரிடம் எந்த பொருட்களும் இல்லை. இதனால், அவர் யார் என அடையாளம் காணப்படவில்லை.

Related Stories: