புதுடெல்லி: உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட துறை என்ற பெயரை, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. உலகளவில் அதிக ஊழியர்களை கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை, ஜெர்மனியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ‘ஸ்டேட்டிஸ்டா’ என்ற தனியார் நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான பட்டியலை நேற்று அது வெளியிட்டது. இதில், உலகத்திலேயே அதிக ஊழியர்களை கொண்ட அரசு துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. இதில், இந்தாண்டு நிலவரப்படி மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.