புதுக்கோட்டை: பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூதாட்டி உட்பட 3 பேருக்கு தலா 31 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் அன்புக்கோவில் அருகே இடையன் கொள்ளைப்பட்டியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்(56), அண்ணாத்துரை(41). இவர்கள் 2021 மார்ச் 3ம்தேதி 24வயதான மனவளர்ச்சி குன்றிய பெண்ணை கடத்தி வந்து அதே ஊரை சேர்ந்த வீரையா மனைவி அஞ்சலை (60) வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேந்திரன், அண்ணாதுரை, அஞ்சலை ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.