அரக்கோணம்: அரக்கோணம் ரயில்நிலையத்தில் திருப்பத்தூர் ரயில்வே மேலாளர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்வினிகுமார். இவர் திருப்பத்தூர் ரயில் நிலைய மேலாளராக உள்ளார். இவரது மனைவி சாந்தினி(29). நிறைமாத கர்ப்பிணியான இவரை சென்னை பெரம்பூர் மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்க்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று அஸ்வினிகுமார், சாந்தி இருவரும் மங்களூரில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரம்பூருக்கு புறப்பட்டு சென்றனர். அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நேற்று மதியம் வரும்போது சாந்தினிக்கு பிரசவ வலி அதிகரித்தது.