அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் பார்க்கிங் இயங்கிவருகிறது. இங்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில், கார் பார்க்கிங் வளாகத்தில் உள்ள ஒரு கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு துப்புரவு பணியாளர் சென்றுள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் முகம் சிதைக்கப்பட்டு உடல் முழுவதும் ரத்தகாயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கொடுத்த தகவல்படி, பார்க்கிங் ஊழியர்கள் சென்று பார்த்துவிட்டு கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.