நடைபயணத்தால் கருப்பாகும் ராகுல்: சோனியா காந்தி அனுப்பிய சன்ஸ்கிரீன்

புதுடெல்லி: குமரியில் தொடங்கி காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறார். வெயில், மழையை பொருட்படுத்தாமல், காலை, மாலை என 2 வேளையும் நடக்கிறார். தொப்பி கூட அணியாமல் வெயிலில் அவர் நடப்பதால், உடல் நிறம் மாற தொடங்கி இருக்கிறது. நல்ல சிகப்பு நிறமான ராகுலின் கை, முகம் போன்றவை அந்த பொலிவை இழந்து வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் நடை பயணத்தின் இடைவேளையில் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் பேசும் போது, தனது உடல் நிறம் மாறி வருவதை நகைச்சுவையாக தெரிவித்தார். தனது சட்டையின் கையை தூக்கி, தோலின் நிறத்தில் ஏற்பட்டுள்ள வித்தியாசத்தையும் அவர் காட்டி சிரித்தார். மேலும், வெயிலில் நடக்கும்போது தோலின் நிறத்தை பாதுகாப்பதற்காக தனது தாயார் சோனியா காந்தி சன்ஸ்கிரீன் அனுப்பி இருப்பதாகவும், ஆனால், அதை தான் பயன்படுத்தவில்லை என்றும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

Related Stories: