சிறை கைதி திடீர் சாவு

புழல்: சூளைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (73) என்பவர், வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், சிறையில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  இறந்தார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: