கொடைக்கானல்: ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ெதாடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் கடும் குளிர் நிலவி வருவதுடன், அங்குள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியல் தண்ணீர் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி, பாம்பார்புரம் நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஜோராக கொட்டுகிறது.