விருதுநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில், பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வர வேண்டும் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் வேண்டி நடிகர் சரத்குமார் அங்கபிரதட்சணம் செய்துள்ளார். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. கோயிலுக்குள் சரத்குமார், ராதிகா ஆகியோர் வேண்டுதலை நிறைவேற்றியதை காண பக்தர்கள் திரண்டனர்.
The post மோடி பிரதமராகவும், மனைவி ராதிகா வெற்றிபெறவும் வேண்டி விருதுநகர் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்த நடிகர் சரத்குமார் appeared first on Dinakaran.