வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஏ.சித்தூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு 120 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தீர்ப்பாயத்தில் முறையிட்டபோது தீர்ப்பாயம் நிலுவை தொகை 22 கோடி ரூபாய் எனவும், இதில் முதல் கட்டமாக 12 கோடி ரூபாய்வழங்கப்படும் எனவும் தெரிவித்ததாம். இதைக்கண்டித்தும், நிலுவை தொகையை முழுமையாக வழங்கக்கோரியும் விவசாயிகள் இன்று வேப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏ.சித்தூர் திருஆரூரான் சர்க்கரை ஆலைவரை பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.