பாலிவுட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: பாபா ராம்தேவ் கடும் தாக்கு

மொராதாபாத்: உ.பி மாநிலம் மொராதாபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, ‘​​பாலிவுட் நடிகர்கள் பலர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், சல்மான்கான் ஆகியோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். சினிமா துறையில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருக்கிறது.

பாலிவுட்டில் நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மது விநியோகிக்கப்படுகிறது. பீடி, சிகரெட், மதுபானம் அருந்தாமல் இருப்பதே நல்லது. ஒட்டுமொத்த தேசமும் போதைப்பழக்கம் இல்லாத நாடாக இருக்க வேண்டும்’ என்றார். ஏற்கனவே அமிதாப்பச்சன், சல்மான்கான், ஆமிர்கான், ஷாருக்கான் போன்றோர் பெயரையும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: