சென்னை: சனாதனம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருவது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து அதனை பின்பற்றுவதே சிறப்பு என அவர் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி; தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதில் சனாதன தர்மத்தை உருவாக்கியவர் யார்? அதன் கொள்கைகள் என்ன? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் உள்ளதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி உறுப்பினரா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.