மேலூர்: மேலூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசியதில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்தவர் வடிவேலன் (40). தனியார் வங்கி மேலாளர். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த போஸ் குடும்பத்திற்கும் நீண்ட காலமாக பிரச்னை இருந்து வந்தது. இதனால், மதுரை சம்பக்குளத்தில், தனது குழந்தைகளுடன் வடிவேலன் குடியிருந்து வருகிறார். அரிட்டாபட்டியில் உள்ள வீட்டில், அவரது சகோதரி குடியிருந்து வருகிறார்.