காவிரி, கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகரிப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-‘செல்பி’ எடுக்க தடை

திருச்சி : சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி உள்ளது. மேலும் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் சுமார் 60,000 கனஅடி தண்ணீர் நேற்று திறந்து விடப்பட்டது. எந்த நேரத்திலும் திறந்துவிடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

காவிரி மற்றும் கொள்ளிடம் நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ “செல்பி” எடுக்க அனுமதி இல்லை என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: