கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) தலைவராக உள்ள முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி மீண்டும் தலைவராகும் வாய்ப்பு இல்லை என்பது பேச்சாக உள்ளது. முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். செயலாளர் ஜெய்ஷா செயலாளராக தொடர உள்ள நிலையில் கங்குலிக்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர் மீண்டும் போட்டியிடவில்லை என்று தகவல் பரவியுள்ளது. இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்தார் கங்குலி. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்குலி, ‘பிசிசிஐ நிர்வாகி பதவியில் நீண்ட காலம் இருந்து விட்டேன். வாழ்க்கையில் நீங்கள் எதை செய்தாலும், இந்தியாவுக்காக விளையாடுவது தான் சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் எப்போதும் வீரராக இருக்க முடியாது.