குட்கா விற்ற 2 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று மதியம் கொடுங்கையூர் குப்பைமேடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், சவுகார்பேட்டை வெங்கடேஷ மேஸ்திரி தெரு ரோஹித் அகர்வால் (22), கொடுங்கையூர் எழில் நகர் தங்கபாண்டியன் (45) என்பது தெரியவந்தது.

இதில், ரோகித் அகர்வால் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கொண்டு வந்து சென்னையில் தங்கபாண்டியனுடன் சேர்ந்து விற்று வந்தது தெரிய வந்தது. கைதான அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: