பெரம்பூர்: கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று மதியம் கொடுங்கையூர் குப்பைமேடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சென்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், சவுகார்பேட்டை வெங்கடேஷ மேஸ்திரி தெரு ரோஹித் அகர்வால் (22), கொடுங்கையூர் எழில் நகர் தங்கபாண்டியன் (45) என்பது தெரியவந்தது.