பேராசிரியைக்கு செக்ஸ் டார்ச்சர் சென்னை டிஐஜி மாமனார் மாமியார் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோட்டில் பேராசிரியைக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்த சென்னை டிஐஜியின் மாமனார் மற்றும் உடந்தையாக இருந்த மாமியார் மீது அனைத்து மகளிர் போலீசார் 4  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு  கதிரம்பட்டி வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரியா (42). கல்லூரி பேராசிரியையாக பணியாற்றியவர். இவர், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனு: எனக்கு 2011 மார்ச் 6ம்  தேதி திருமணம் நடந்தது குழந்தைகள் இல்லை. எனது கணவருக்கு நான்  இரண்டாவது மனைவி. கடந்த மாதம் 13ம் தேதி நானும், எனது கணவரும் கதிரம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த மாமனார் ரங்கசாமி, மாமியார் செல்லம்மாள்  ஆகியோர் என்னை தாக்கினர். அடுத்த நாள் நான் வீட்டில் இருந்தபோது எனது மாமனார் தன்னை அரை நிர்வாணப்படுத்திக்கொண்டு எனது கையைப்பிடித்து இழுத்தார். ஒன்றாக இருந்தால் குழந்தையும், சொத்தும் தருவதாக கூறினார்.

இதைப்பார்த்த எனது மாமியார் இதை தடுக்கவோ, எதிர்க்கவோ இல்லை. மாறாக என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு விபரத்தை கூறினேன். அவர் விரைந்து வந்து தந்தையை கண்டித்தார். அவரையும் எனது மாமனார் மிரட்டினார். எனது மாமனார்  என்னிடம் அநாகரீமாக நடந்து கொண்டது செல்போனில் வீடியோ ஆதாரமாக உள்ளது. என் கணவரை மிரட்டிய ஆதாரமும் உள்ளது. எனவே, எனக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மாமியார் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார். இது குறித்த புகாரின்பேரில், ஈரோடு மகளிர் போலீசார், பிரியாவின் மாமனார் ரங்கசாமி, மாமியார்  செல்லம்மாள் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை செய்தல் உட்பட 4  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ரங்கசாமிக்கு ஒரு மகன், 3 மகள்கள் இருப்பதும், இதில் 3வது மகளின் கணவர் சென்னையில் டிஐஜியாக உள்ளதும் தெரியவந்தது.

Related Stories: