திருமலை: திருப்பதி மகதி அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் குறித்த 3 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதனை தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கவுதமி கலந்துகொண்டு பேசியதாவது: புற்றுநோய் விழிப்புணர்வு சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் முக்கியமானது. வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமென்றாலும் புற்றுநோய் வரலாம்.