புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரை செய்யும்படி தலைமை நீதிபதி யுயு.லலித்துக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியாக இருப்பவர், தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது, வழக்கமான நடைமுறை. கடந்த முறை தலைமை நீதபதியாக இருந்த என்.வி.ரமணா, தான் ஓய்வு பெறும் முன்பாக தற்போதுள்ள தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் பெயரை பரிந்துரை செய்தார். இந்நிலையில், யு.யு.லலித்தும் அடுத்த மாதம் 8ம் தேதி ஓய்வு பெறுகிறார்.