சின்னாளபட்டி: பேரூராட்சி ஆணையாளரின் உத்தரவின்பேரில், சின்னாளபட்டியில் பொது கழிவறை சுத்தம் செய்யப்பட்டு, அதனை சுற்றி வளர்ந்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் 1வது வார்டு ஆதிதிராவிடர் காலனி (காமாட்சி நகர்) பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிவறை மிகவும் சேதமடைந்து, கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரப்பும் நிலையில் இருந்தது. பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ், அதிரடியாக உள்ளே சென்று பார்வையிட்டார்.