டெல்லி: டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், பாயிண்ட் ஆப் சேல் கருவிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த டோக்கனைசேஷன் எனப்படும் புதிய தரவுகள் சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்கெனவே பெரிய வணிகர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். டோக்கனைசேஷன் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பரிவர்த்தனைக்கு உதவும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் ரிசர்வ் வங்கியின் கார்ட் ஆன் ஃபைல் முறையிலான டோக்கன்சேஷனை மாற்றப்பட்டுள்ளன. தற்போது இந்த பணி நிறைவடைந்துவிட்டதால் புதிய டோக்கனைசேஷன் விதிமுறைகள் இன்று முதல் அமலாகின்றன.