அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு தேர்வான 1.024 விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1,024 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் லட்சுமிபிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: