திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது 18வது நாள் நடைப்பயணத்தை தனது சொந்த தொகுதியான வயநாட்டில் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் 3,500 கி.மீ. ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். கடந்த 10ம் தேதி கேரளாவுக்கு சென்ற அவர், தொடர்ந்து அம்மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கேரளாவில் 18வது நாளாக ராகுல் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று நடந்து வருகின்றனர். அப்போது ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்ற சிறுமி ஒருவர், உற்சாக மிகுதியால் ஆனந்த கண்ணீர் வடித்தபோது ராகுல் அவரை தேற்றினார்.