கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஆட்டுசந்தையானது வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும். தற்போது ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் புரட்டாசி 2வது திங்கட்கிழமையான இன்று காலை வழக்கம் போல் ஆட்டு சந்தை தொடங்கியது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான குடியாத்தம், காட்பாடி அணைக்கட்டு, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளும், ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் தங்களது ஆடுகளை வியாபாரத்திற்காக கொண்டு வந்திருந்தனர்.