* துலீப் கோப்பை பைனலில் தனது கவனத்தை சிதைப்பதற்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தரக்குறைவாகப் பேசி ‘ஸ்லெட்ஜிங்’ முறைகேட்டில் ஈடுபட்டதாக தென் மண்டல பேட்ஸ்மேன் ரவி தேஜா நேற்று நடுவரிடம் புகார் செய்தார். இதையடுத்து, யாஷஸ்வியை களத்தில் இருந்து வெளியேறுமாறு மேற்கு மண்டல கேப்டன் ரகானே உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் நடுநிலையோடு நடந்துகொண்ட ரகானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அக். 4ம் தேதி மாலை 6.00 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. வாக்குப் பதிவு அக். 18ம் தேதி நடைபெறுவதுடன், அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படும்.