பெங்களூர்: ஜனாதிபதி திரௌபதி முர்மு கர்நாடகாவில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை முதல் வரும் 28-ம் தேதி வரை கர்நாடகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளதாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரௌபதி முர்மு. ஜனாதிபதியாக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் முறையாக கர்நாடகா செல்கிறார்.
கர்நாடக வரும் அவர் முதலில் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் தசரா விழாவை அவர் தொடங்கி வைக்கிறார். அதே நாளில், ஹூப்ளியில் ஹூப்ளி -தர்வாட் முனிசிபல் கார்ப்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்ட பூர சன்மனா என்ற பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். தொடர்ந்து தனது பயணத்தின் 2-வது நாளில் தார்வாட்டில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.